குழித்துறை: நள்ளிரவில் காந்தி சிலை உடைப்பு போலீஸ் விசாரணை

58பார்த்தது
குழித்துறை அருகே மருதங்கோடு பகுதியில் அரசு நிறுவனமான இரணியல் சர்வோதய சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் மகாத்மா காந்தியின் திருவருவுச்சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு குடியரசு மற்றும் சுதந்திர தினங்கள் உட்பட முக்கிய நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

       இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இந்த சங்கத்தின் வளாகத்தில் புகுந்த மர்ம நபர்கள் மகாத்மா காந்தி சிலையின் தலைப்பகுதியை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த பகுதி சுற்று சுவரும் இடிக்கப்பட்டது.  

     இன்று காலை இந்த சம்பவம் குறித்து பரபரப்பாக அந்தப் பகுதி முழுவதும் பரவியது. இது குறித்து இரணியல் சர்வோதய சங்க செயலாளர் ஜெயபால் என்பவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று தேச விரோத செயல்களில் ஈட்டப்படுபவர்களை போலீசார் விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி