திங்கள்சந்தையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தரகுறைவாக பேசியதாக பாரதிய ஜனதாவின் அனுராக் தாகூர் எம். பி - யை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று மாலை திங்கள் நகர் பேருந்து நிலைய முன்புள்ள போலீஸ் பூத் அருகில் வைத்து ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட தலைவர் கே டி உதயம் தலைமை வகித்தார். திங்கள் நகர் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் ஜெமினிஷ் வரவேற்றார். வட்டார தலைவர்கள் சாலமன், முருகேசன், அசோக்ராஜ், டேனியல், சேம் சுரேஷ்குமார், தங்கலெட்சுமி, முருகானந்தம், செல்வராஜ், ஜெனித், பால்துரை நகர தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பேச்சாளர்கள் அந்தோணி முத்து, பீட்டர் தஸ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி