தமிழ் வருட பிறப்பான சித்தரை மாதம் முதல் தேதி நாளை பிறக்க உள்ளதை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ 1500 ரூபாய்க்கும், மல்லி 500 ரூபாய்க்கும், சிவப்பு கிரந்தி 300 ரூபாய்க்கும் விலை உயர்ந்துள்ளது. மேலும் பூக்களின் வரத்து ஒரு பக்கம் அதிகரித்து இருந்தாலும் பூக்களின் தேவையை கருதி விற்பனையும் அதிக அளவில் நடந்து வருவதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.