தாய்க்கும், குழந்தைக்கும் இடையே நடந்த பாசப் போராட்டம்

1546பார்த்தது
தமிழம் முழுதும் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் பிளஸ் 2 பிளஸ் 1 பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற்றன, மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தை விட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிக்கப்பட்டன.

தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. வெயிலின் தாக்கத்தினால் ஜூன் 6 பேதிக்கு பதிலாக ஜூன் 10ஆம் தேதி இன்று பள்ளி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை முன்னதாக தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று பள்ளி திறக்கப்பட்டதை ஒட்டி பள்ளியில் முதலாவதாக சேர்க்கப்பட்ட எல்கேஜி குழந்தை தனது தாயை விட்டு மனம் பிரிய முடியாமல் கதறி அழுதது. இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி