விஜயதரணிக்கு மீண்டும் அழைப்பு விடுத்த காங்கிரஸ்

54பார்த்தது
விஜயதரணிக்கு மீண்டும் அழைப்பு விடுத்த காங்கிரஸ்
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருந்தவர் விஜயதரணி. இவர் தொடர்ந்து மூன்று முறை அந்த  தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆனால்   தற்போது பாரதிய ஜனதா கட்சியில் அண்மையில் தன்னை இணைத்து கொண்டார்.
இந்த நிலையில் தமிழக விவசாய காங்கிரஸ் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர் எஸ் ராஜன் என்பவர்  விடுத்துள்ள   அறிக்கையில் விஜய்தரணி நடந்ததை மறந்து காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார். அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: - 

       காங்கிரஸ் கட்சியின் அருமை உணராமல் விஜயதரணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கூறிய வாக்குறுதியை நம்பி பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். ஆனால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில்  விஜயதாரணிக்கு பாரதிய ஜனதா சார்பில் சீட்டு வழங்கப்படவில்லை. தற்போது அதை எண்ணி வருத்தப்பட்டு, கடந்த ஆறு மாதங்களாக பாரதிய ஜனதா தன்னை கண்டு கொள்ளாமல் உள்ளது எனவும்,   பாரதிய ஜனதா தன்னை பாசம் காட்டி மோசம் செய்து விட்டது என்று வருத்தப்பட்டுள்ளார்.

     விஜயதரணி இப்போது விஜயதரணி உணர்ந்து புரிந்து கொண்டதால் மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படை கருத்தை மனதில் வைத்து விஜய தரணி மீண்டும் அவரது தாய் கட்சியான காங்கிரஸின் சேர வேண்டும்.  தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி