பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பதி கோயிலில் வீடியோ எடுத்த விவகாரத்தில், யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவரது வங்கிக்கணக்கை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வாசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக அவர் தரப்பு வழக்கறிஞர் பேட்டியளித்துள்ளார்.