பார்வதிபுரம்: கார்கள் மோதல் பெண்  உட்பட 2 பேர் காயம்

54பார்த்தது
நாகர்கோவில் அடுத்த பார்வதிபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று (17-ம் தேதி)  பிற்பகல் நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அது போன்று திருவனந்தபுரம் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மற்றொரு சொகுசு காரும் வந்து கொண்டிருந்தது. பார்வதிபுரம் பகுதியில் வரும்போது எதிர்பாராத விதமாக இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

      இதில் காருக்குள் இருந்த ஒரு பெண் உட்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.   சம்பவம் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் உடனடியாக சம்பவ இடம் சென்று இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார்  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

        இதை அடுத்து இரணியல் போலீசார் சம்பவ இடம் சென்று  போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் காரில் வந்தவர்கள் யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி