ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

79பார்த்தது
மதுரை, திருமங்கலம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடன் பிரச்னையால் ஊராண்ட உப்பனூரைச் சேர்ந்த பால்பாண்டி (41), தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. ராஜாஜி மருத்துவமனையில் 5 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: News Tamil 24*7

தொடர்புடைய செய்தி