மூளை சாவடைந்த வாலிபரின் உடல் உறுப்புக்கள் தானம் அரசு மரியாதை

81பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் பகுதி பள்ளவிளையை சேர்ந்தவர் ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயல். இவர் கடந்த 08. 09. 2024 அன்று இருசக்கர வாகனத்தில் டெரிக் சந்திப்பில் சென்றபோது எதிரே வந்த பைக் இவர்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜஸ்டின், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயலின் மூளை செயலிழந்து இருப்பதை அவரது உறவினர்களுக்கு மருத்துவர்கள் கூறினார். பின்னர் அவரது உறவினர்கள் தாமாக முன்வந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர்.
அதன் பின்பு தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பு காத்திருப்பு பட்டியலின் அடிப்படையில், கல்லீரலை திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் ஒன்று மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும், கருவிழிகள் நெல்லை அரவிந்த் மருத்துவமனைக்கும், தோல் மதுரையிலுள்ள மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இறுதி மரியாதையுடன் அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயல் உடலுக்கு நாகர்கோவில் ஆர். டி. ஓ காளீஸ்வரி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி