நித்திரவிளை அருகே சொத்து தகராறில்  தாக்குதல் ஒருவர் கைது

53பார்த்தது
நித்திரவிளை அருகே சொத்து தகராறில்  தாக்குதல் ஒருவர் கைது
நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷெரின் (41). இவர் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அந்த  வீட்டின் அருகில் வசிப்பவர் ஆபேல் (48).   ஆபேலுக்கும் ஷெரின் மனைவியின் சகோதரி பெமி என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோதம் உள்ளது.
     இந்த நிலையில் பெமியிடம் இருந்து ஷெரின் மூன்று சென்ட் நிலம் விலைக்கு வாங்கியதாக தெரிகிறது. பிரச்சனைக்குரிய அந்த சொத்தை எப்படி வாங்கலாம் என்று செரின் இடம் ஆபேல் தகராறு செய்து, கையில் இருந்த பைக் சாவியால் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தாக்குதலில் காயம் அடைந்த ஷெரின் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபேலை  கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி