தக்கலையில் பெட்ரோல் பங்கில் செல்போன் திருடிய மர்ம நபர்

558பார்த்தது
தக்கலை அருகே அரண்மனை சாலை பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஊழியர் பண வசூலிக்க பயன்படுத்தும் இரண்டு விலை உயர்ந்த செல்போன்களை சார்ஜ் போட்டுவிட்டு ஊழியர்கள் தூங்கி உள்ளனர். அவர்கள் விழித்து பார்த்த போது செல்போன் மாயமாகி இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மேலாளருக்கு தகவல் கொடுத்தார்.

இது குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் கிருஷ்ணன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது பங்கு ஊழியர்கள் அதிகாலை 3 மணி அளவில் அயர்ந்து தூங்கும் போது, அங்கு வந்த மர்ம நபர் சார்ஜ் போட்டு இருந்த இரண்டு விலை உயர்ந்த செல்போன்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

சிசிடிவி கேமராவில் பதிவானதை ஆய்வு செய்த போலீசார் செல்போனை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல் பங்கில் நோட்டமிட்டு  சாவகாசமாக வந்து திருடி செல்லம் சிசிடிவி கேமரா காட்சி சமூக வலைத்தளங்களில்  வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி