கவியரசர் கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர், 15 பிள்ளைகள். பொன்னழகி, வல்லியம்மை, பார்வதி ஆகியோரே கண்ணதாசன் மனைவி ஆவார்கள். கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள்.