உத்திரமேரூர் பெருமாள் கோவில் தேரோட்டம்; வடம் பிடித்து இழுத்த பெண்கள்

1056பார்த்தது
உத்திரமேரூர் ஸ்ரீ சுந்தர வரதராஜப்பெருமாள் கோயில் தேரை நூற்றுக்கணக்கான பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தர வரதராஜப்பெருமாள் கோவில் தேரோட்டமானது இன்று (23.04.2024) நடைபெற்றது. ஸ்ரீ சுந்தர வரதராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதில் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து சென்று நேர்திகடன் செலுத்தினார்.

பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. மேலும் தேருக்கு முன்னால் நாட்டிய கலைஞர்கள் நடனமாடி சென்றனர். பக்தர்கள் ஸ்ரீ சுந்தர வரதராஜப் பெருமாளுக்கு தேங்காய் உடைத்து, தீவாரத்தனை காட்டி வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி