விமான நிலையத்தில் கடத்தப்பட்ட 10 அனகோண்டாக்கள்

61பார்த்தது
விமான நிலையத்தில் கடத்தப்பட்ட 10 அனகோண்டாக்கள்
பெங்களூரு விமான நிலையத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பாங்காக்கில் இருந்து வந்த பயணிகளின் உடைமைகளை சோதித்த போது ஒரு நபரின் சூட்கேஸில் பொருட்கள் நெளிவதை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த நபரின் உடமைகளை திறந்து பார்த்தபோது 10 அனகோண்டாக்கள் இருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பாம்புகளை கடத்திய அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது வனவிலங்கு கடத்தலின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.