சிறுமிக்கு பாலியல் தொல்லை - கரகாட்ட கலைஞர் கைது

55பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை - கரகாட்ட கலைஞர் கைது
தஞ்சாவூர் அடுத்த பிள்ளையார்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த் (27). கரகாட்ட கலைஞரான இவருக்கும், 16 வயது சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தி கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆனந்த்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி