உத்திரமேரூரில் தெரு நாய்கள் தொல்லை, பொதுமக்கள் அவதி.

559பார்த்தது
உத்திரமேரூரில் தெரு நாய்கள் தொல்லை, பொதுமக்கள் அவதி.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த நிலையில் உத்திரமேரூர் பேரூராட்சியில் நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் உள்ளது.

முக்கியமாக கவிஞர் கண்ணதாசன் தெரு, என்டத்தூர் சாலை, வெள்ளை செட்டி தெரு, காஞ்சிபுரம் சாலை, எம் ஜி ஆர் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் நூற்றுக்கணக்கில் உள்ளது.

நாய்கள் பொதுமக்கள், குழந்தைகள், முதியோர் என அனைவரையும் துரத்தி, துரத்தி கடிப்பதால் மக்கள் அச்சமும் பீதியும் அடைந்து வருகின்றனர். இது குறித்து உத்திரமேரூர் பேரூராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி