சித்தாமூரில் திமுகவினர் தேர்தல் பிரச்சாரம்

66பார்த்தது
காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ்நாடு காலணி தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் நெல்லிக்குப்பம் புகழேந்தி தீவிர வாக்கு சேகரிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்தளூர், பெருகரணை, கோட்டைபூஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் அவர்களை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காலணி தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் நெல்லிக்குப்பம் புகழேந்தி அவர்கள் கலந்துகொண்டு திமுக அரசின் சாதனைகளையும், மத்திய மாநில அரசின் தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் க. சுந்தர், பனையூர் மு. பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி