குண்டூர் மாவட்டம் தெனாலியில் வாராஹி யாத்திரையில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, பவன் கல்யாண் மீது ஒருவர் கல் வீசினார். ஆனால் அந்தக் கல் அவர் மீது விழாமல் தள்ளி சென்று விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்நிலையில் அவர் மீது கல்லை வீசி தாக்குதலில் ஈடுபட்டவர் அவரது ஜன சேனா கட்சியை சேர்ந்தவர்தான் என்றும் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.