கெஜ்ரிவால் மனு மீது நாளை விசாரணை

74பார்த்தது
கெஜ்ரிவால் மனு மீது நாளை விசாரணை
மதுபான ஊழல் வழக்கில் தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நாளை(ஏப்ரல் 15) விசாரணை நடைபெறவுள்ளது. நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. இதே மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 9ம் தேதி தள்ளுபடி செய்தது. கெஜ்ரிவாலின் காவல் நாளையுடன் முடிவடையும் நிலையில், ED அதிகாரிகள் அவரை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி