"குடிநீர் நீரேற்ற வளாகத்திற்கு புதிய சுற்றுச்சுவர் அமைப்பு"

66பார்த்தது
"குடிநீர் நீரேற்ற வளாகத்திற்கு புதிய சுற்றுச்சுவர் அமைப்பு"
மாமல்லபுரத்தில் பேரூராட்சி குடிநீர் நீரேற்று வளாகம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ளது. ஆழ்துளை குடிநீர் கிணறுகள், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆகியவை உள்ளன. மேலும், பலவகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

இவ்வளாகம், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியே உள்ளது. அதன் முகப்பில் வளாக சுற்றுச்சுவர், வடக்கில், அரசு கட்டடம் மற்றும் சிற்பக் கல்லுாரி வளாக சுற்றுச்சுவர், தெற்கில் தனியார் வளாக சுற்றுச்சுவர் உள்ளது.

இப்பகுதி கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றமடைந்ததால், சாலை விரிவாக்கப் படுகிறது.

இதற்காக, குடிநீர் வளாக முகப்பு பகுதியை, தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி, முகப்பு சுவரை இடித்தது.

இந்நிலையில், கையகப்படுத்தப்பட்டுள்ள பகுதியை தவிர்த்து, பேரூராட்சி நிர்வாகம் புதிதாக முகப்பு சுற்றுச்சுவரை, தற்போது கட்டியுள்ளது. "

தொடர்புடைய செய்தி