ஊசி மணி பாசி மணி மாலை அணிவித்து திமுக வேட்பாளர் வரவேற்பு

60பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் தமிழ்மணி தலைமையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியத்திற்குஉள்ளிட்ட குழிப்பான்தண்டலம், எச்சூர், கொத்திமங்கலம், நல்லூர் , உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பாக கொத்திமங்கலம் ஊராட்சியில் உள்ள நரிக்குறவர்கள் வேட்பாளருக்கு ஊசிமணி பாசிமணி மாலைகளை அணிவித்து வரவேற்பு வழங்கினர் பகுதிகளில் வேன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் மத்தியில் ஆளும் மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாகும் அதற்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


இந்தப் பிரச்சாரத்தின் போது, காஞ்சி வடக்கு மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், விசிக மாவட்ட செயலாளர் கனல்விழி திருக்கழுக்குன்றம் ஒன்றிய பெருந்தலைவர் ஆர் டி அரசு, துணைத் தலைவர் பச்சையப்பன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர் கே ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி