ரூ. 30 லட்சத்திற்கு ஏலம் போன பருத்தி

65பார்த்தது
ரூ. 30 லட்சத்திற்கு ஏலம் போன பருத்தி
நாமக்கல்லில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் வாரம்தோறும் செவ்வாய்க் கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 1,200 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இந்த மொத்த பருத்தியும் ரூ. 30 லட்சத்திற்கு நேரடி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.