பாஜக பிரமுகர் வீட்டில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை?

2276பார்த்தது
பாஜக பிரமுகர் வீட்டில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை?
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் கே. ஆர். எம். ராதாகிருஷ்ணன், இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.

பின்னர் அதிமுகவில் இருந்து விலகி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன் பாஜகவில் இணைந்தார்.
இவர் தற்போது பாஜகவில் ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது வசித்து வரும் தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள வீட்டில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து 3 வாகனங்களில் நேற்று அங்கு சென்ற அதிகாரிகள், வீடு பூட்டியிருந்ததால் உறவினர்கள் மூலம் சாவியை பெற்று, போலீசார் துணையுடன் வீட்டை திறந்து சோதனை நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சோதனை விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி