தனியார் விடுதிக்காக பாறை கற்கள் கொட்ட மீனவர்கள் எதிர்ப்பு,

76பார்த்தது
தனியார் விடுதிக்காக கடற்கரையில் பாறை கற்கள் கொட்ட நெம்மேலி குப்பம் மீனவர்கள் எதிர்ப்பு,

செங்கல்பட்டு மாவட்டம்
திருப்போரூர் அடுத்த நெம்மேலி மீனவர் பகுதி அருகில், தனியார் விடுதிகள் உள்ளன. இப்பகுதியில் ஏற்படும் கடலரிப்பால், விடுதி கட்டிடங்கள் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது,

இதையடுத்து, ஒரு விடுதி நிர்வாகத்தினர், கடலரிப்பு பாதிப்பை தவிர்க்க, விடுதியை ஒட்டிய கடற்கரையில், பாறைக்கற்களை கொட்டிவருகின்றனர்,

கற்கள் கொட்டுவதால் மீனவ பகுதிக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதிய மீனவர்கள், கற்கள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்,
இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி