தனியார் நாளிதழ் போட்டோகிராபரை வெட்டி தங்க செயின் பறிப்பு

3312பார்த்தது
தனியார் நாளிதழ் போட்டோகிராபரை வெட்டி தங்க செயின் பறிப்பு
தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் (30), இவர் தனியார் நாளிதழின் தாம்பரம் பகுதி போட்டோகிராபராக உள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் தனது டூவீலரில் குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியை கடந்து சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்து வழிமறித்த இரண்டு மர்மநபர்கள், கவுதமை கத்தியால் வெட்டி அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயின் மற்றும் அவர் வைத்திருந்த பையை பறித்து சென்றனர்.

அந்த பையில் ரூ. 1. 5 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெட்டுக்காயம் அடைந்த கவுதம் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இது பத்திரிகையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி