"பீரோவை உடைத்து நகை திருட்டு பவுஞ்சூரில் இருவருக்கு 'காப்பு'

52பார்த்தது
"பீரோவை உடைத்து நகை திருட்டு பவுஞ்சூரில் இருவருக்கு 'காப்பு'
பவுஞ்சூர் அருகே விழுதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 50. விவசாயி.

இவர், கடந்த 26ம் தேதி, காலை 9: 00 மணிக்கு, வீட்டு கதவை பூட்டி, சாவியை ஜன்னலில் வைத்து விட்டு, மனைவி மல்லிகாவுடன்தங்களுக்கு சொந்தமான வயலுக்கு விவசாய வேலைக்காக சென்றார்.


விசாரணை


வேலை முடிந்து, இரவு 8: 00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்திருந்தன.

அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்க்கையில், படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 9 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, அணைக்கட்டு காவல் நிலையத்தில், முருகேசன் புகார் அளித்தார். வழக்குப் பதிந்து விசாரித்த போலீசார், சம்பவம் நடந்த அன்று, அப்பகுதியில் சந்தேகமான முறையில் நடமாடிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வடக்கு வயலுார் கிராமத்தைச் சேர்ந்த நவீன், 35, சேவூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 24, என்பது தெரிய வந்தது.

தொடர்புடைய செய்தி