தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆட்டோ டிரைவர் கைது

3006பார்த்தது
தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆட்டோ டிரைவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை - கரசங்கால் அடுத்த சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் (23), இவர் தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டிக் கொண்டே புறநகர் பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதிகளில் டூவீலர் திருடி வந்துள்ளார்.

தொடந்து திருடும் டூவீலர்களை வண்டலூர் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் பதுக்கி வைத்து விற்று வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது தஞ்சாவூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் டூவீலர் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் மறைமலைநகர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு சிங்கப்பெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு டூவீலரை திருடி அதை ஓட்டி வந்த கார்த்திக் கையும் களவுமாக வசமாக போலீஸ் பிடியில் சிக்கினார்.

போலீசார் அவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 7 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி