மாமல்லபுரம் பகுதியில் உயிர் காப்பாளர் நியமனம்

75பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் உயிரிழப்புகள் நடைபெற்ற வருவதால், நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் , மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, உயிர் காப்பாளர் ஒருவரை நியமனம் செய்ய உத்தரவிட்டார்.



இதன் அடிப்படையில் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் ஒப்பந்த ஊழியர் கிருஷ்ணராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாவட்ட ஆட்சியர் சந்தித்த கிருஷ்ணராஜ் நியமன ஆணையை நேரில் பெற்றுக் கொண்டார்.
ஒப்பந்த ஊழியரிடம் மாவட்ட ஆட்சியர், எந்த மாதிரியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்தார். தொடர்ந்து
கிருஷ்ணராஜுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் உத்தரவு பிறப்பித்தார்.


தொடர்ந்து இதுகுறித்து கிருஷ்ணராஜ் கூறுகையில் , இதுவரை 50க்கும் மேற்பட்டோர் நபர்களை காப்பாற்றி இருப்பதாகவும், கடற்கரையில் உயிரிழந்தவர்கள் உடல்களையும் மீட்டிருப்பதாகவும், தான் இந்த வேலையை விரும்பி செய்வதாகவும், தனக்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் வேலை கொடுத்திருப்பதற்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதனால் மாவட்ட ஆட்சி இருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி