ஒருநாள் மழையில் பல்லாங்குழியான ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை

76பார்த்தது
ஒருநாள் மழையில் பல்லாங்குழியான ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை
ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், காந்தி சாலை, தேரடி, திருவள்ளூர் சாலை, பேருந்து நிலைய சாலை உள்ளிட்டவை பிரதான சாலையாக உள்ளன. பாதாளா சாக்கடை பணியால் அனைத்து சாலைகளும் முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பல்லாங்குழியான சாலையில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். தற்போது, பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்து சாலைகளையும் சீரமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


இது குறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பேரூராட்சி பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் நெடுஞ்சாலைத் துறை கட்டுபாட்டில் உள்ளது. மேலும், சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கும் கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது. விரைவில் சாலைகள் சீரமைக்கப்படும், '' என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி