செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் ஆட்சியர் அதிரடி ஆய்வு

58பார்த்தது
உங்கள் ஊர் உங்களை தேடி திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார் மருத்துவமனையில் கழிப்பழையை ஆய்வு மேற்கொண்டார் கழிப்பறை தூய்மையாக இல்லை தினம் தினம் பல ஆயிரகணக்கான நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வீடு திரும்புகின்றனர் எனவே இனி கழிப்பறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்
இதே போல் மருத்துக்கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மாணவர்களிடம் உணவு தரமாக உள்ளதாக என கேட்டறிந்தார் இறுதியாக சமையல்அறையை ஆய்வு மேற்கொண்ட போது ஈக்கள் அதிகமாக உள்ளது சமையல் அறையும் தூய்மையாக இல்லை என ஆட்சியர் கேள்வி எழுப்பினார் இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொறுப்பு முதல்வர் ஜோதிகுமார், உதவி மருத்துவ நிலைய அலுவலர் முகுந்தன் செங்கல்பட்டு நகராட்சி அதிகாரிகள், மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி