குன்றத்துார் சாலையில் உடைந்த ‛'மேன்ஹோல்' மூடி

59பார்த்தது
குன்றத்துார் சாலையில் உடைந்த ‛'மேன்ஹோல்' மூடி
காஞ்சிபுரம் மாவட்டம்
ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, குன்றத்துார் வழியாக, போரூர் செல்லும் சாலையில் ஆயிரக்கணக் கான வாகனங்கள் சென்று வருகின்றன. சிப்காட் தொழிற்பேட்டைகளில் இருந்து வரும் வாகனங்கள் அதிகமாக செல்லும் முக்கியசாலையாக இந்த சாலை உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பட்டுநுால்சத்திரம், கச்சிப்பட்டு பகுதிகளில், இந்த சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழாய் அமைக்கப்பபட்டது.


இந்த நிலையில், சாலையில் நடுவே அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' மூடி உடைந்து உள்ளது.


எனவே, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி அதிகாரிகள், உடைந்த மேன்ஹோல் மூடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி