திமுக ஆட்சியின் அவலங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்த அதிமுக

79பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட திருப்போரூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பகுதிகளில் ஒன்றிய கழக செயலாளர் தையூர் எஸ் குமரவேல் ஏற்பாட்டில் திமுக ஆட்சியில் அரங்கேறும் குற்ற சம்பவங்கள் கள்ளச்சாராயம், கொலை, கொள்ளை, போன்ற அவலங்களை பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவங்களில் திமுக அரசுக்கு தொடர்புடையதாகவும் போதைப் பொருள் பழக்கத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாகவும் இதற்கெல்லாம் காரணமான திமுக தலைவர், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அச்சிடப்பட்ட துண்டு பிரசுரத்தை கழக நிர்வாகிகளுடன் ஒவ்வொரு கடைகளுக்கு சென்று மாவட்ட செயலாளர் எஸ் ஆறுமுகம் வழங்கினார் நிகழ்ச்சியில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குட்டி என்கிற நந்தகுமார் மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த்ராவ் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆணூர் பக்தவச்சலம் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் மகளிரணி பொறுப்பாளர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி