டூ - வீலரில் சென்றவர் அரசு பஸ் மோதி பலி

80பார்த்தது
டூ - வீலரில் சென்றவர் அரசு பஸ் மோதி பலி
ஸ்ரீபெரும்புதுார், கச்சிப்பட்டு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 39; இவர், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவந்தார். இவருக்கு, லட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் (ஆக., 27) இரவு, இருசக்கர வாகனத்தில், ஸ்ரீபெரும்புதுார் சென்றார். சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ராஜிவ்காந்திநினைவகம் அருகே, சாலையை கடக்கும் போது, தர்மபுரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து, கார்த்திகேயன் மீதுமோதியது.

இதில், துாக்கி விசப்பட்ட அவருக்கு, தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்குஅனுப்பினர்.

அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர்ஏற்கனவே இறந்து விட்ட தாக மருத்துவர்கள்தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி