உணவு பாதுகாப்பு துறை உரிமம்: பயிற்சி சிறப்பு முகாம்

79பார்த்தது
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் பாலவாக்கம் வணிகர் நல சங்கம் இணைந்து காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உரிமம், பயிற்சி & மருத்துவ முகாமை இன்று (செப். 12) பாலவாக்கம் பகுதியில் நடத்தியது. இதில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு IAS, உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா IAS ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து வணிகர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா, செங்கல்பட்டு மாவட்டம் செயின்ட் தாமஸ் மவுண்ட் & ஆலந்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பிரபாகரன், விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வணிகர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் பயிற்சி அளித்து, உரிமம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி