செங்கல்பட்டு: தேமுதிக கட்சியின் முப்பெரும் விழா

51பார்த்தது
செங்கல்பட்டு: தேமுதிக கட்சியின் முப்பெரும் விழா
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் தையூர் ஊராட்சி இளவந்தாங்கல் பகுதி ஓ. எம். ஆர் சாலை எதிரில் தேமுதிக கட்சியின் முப்பெரும் விழா நேற்று (அக். 20) இரவு நடைபெற்றது.

தேமுதிக 20ம் ஆண்டு தொடக்க விழா, கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியதற்கு பாராட்டு விழா மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.

இதில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு ஆளுயர கட்சி மாலை, கிரீடம் அணிவித்து நினைவுப் பரிசாக வேல் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ'வுமான அனகை முருகேசன், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் தையூர் கராத்தே கோபிநாத், மாவட்ட இளைஞரணி செயலாளர் டாக்டர் நாகராஜ் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி