செய்யூர் - Seiyur

வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 கொளத்துார் ஊராட்சியில் ஆயகுனம், புத்தமங்கலம், மேட்டு கொளத்துார், பள்ள கொளத்துார் உள்ளிட்ட 4 கிராமங்கள் உள்ளன. ஊராட்சியில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். 2024–25 நிதி ஆண்டில் இந்த ஊராட்சியில் 7 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டதாகவும், குளம் மற்றும் பண்ணைக் குட்டை அமைக்க இடம் தேர்வு செய்யப்படாததால் வேலை நடைபெறாமல் நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறி இன்று (செப்.20) ஊராட்சி மன்ற அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மக்கள் திரண்டனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా