தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

73பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் பிரபல எஸ். ஆர். எம். தனியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 10, 000 மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எஸ் ஆர் எம் குலோபல் மருத்துவமனைக்கு narmada_rathnakumar@outlook. com என்கிற மெயில் ஐடியில் இருந்து மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி