காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள மகாண்யம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 53. அதே பகுதியில் உள்ள நர்சரி கார்டனில், செடி பராமரிக்கும் பணி செய்து வந்தார். ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மகாண்யத்திற்கு, ஸ்பிளண்டர் பைக்கில், அன்பழகன் சென்றார். ஸ்ரீபெரும்புதூர் - மணிமங்கலம் நெடுஞ்சாலையில், மலைப்பாதை பகுதியைக் கடந்தபோது, அந்த வழியே சென்ற மினி வேன், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்பழகன், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.