பழுதடைந்து இடிந்து விழும் சூழலில் டிரான்ஸ்பார்மர்

51பார்த்தது
அச்சிறுபாக்கம் அருகே
பழுதடைந்து இடிந்து விழும் சூழலில் டிரான்ஸ்பார்மர் ஆபத்து ஏற்படுத்தும் முன்பே சீரமைக்க கோரிக்கை.

செங்கல்பட்டு மாவட்டம்
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள
பெருங்கரனை ஊராட்சியில் புதிதாக
பேருந்து நிலையம் அமைய உள்ளது.
அதன் அருகில் இடிந்து விழும் நிலையில் டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் சிமெண்ட் பேயர்ந்துள்ளது.
இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர்.

மேலும்
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையம் அருகே இந்த மின்மாற்றி
இருப்பதால் பயத்துடனே மாணவர்கள் கடந்து செல்கின்றனர்.

பலமுறை மின்வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தும் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும் புதியதாக அமைய உள்ள பேருந்து நிழற்குடை அமைக்கப்படும் பகுதியில் உள்ளதால் மின்மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் மாணவர்களும்
சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி