செங்கல்பட்டில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது. அதனை கண்டிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில்அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

அதில் ஒரு பகுதியாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்ததற்க்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க்க வேண்டும், விஷ சாராயம் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் இனி விஷ சாராயம் முழுமையாக தடை செய்ய வேண்டும். அதிமுக ஆட்சியின் போது இதே திமுக கட்சியை சேர்ந்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி ஆகியோர் கரும்புச்சட்டை அணிந்து மதுவிலக்கு கொண்டுவரவேண்டும் சாராயத்தை ஒழிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தவில்லையா என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்



மேலும் பேசுகையில் நாங்கள் பேசுவதை வீடியோ எடுத்து பதிவு செய்யும் காவல்துறை எங்களுடைய ஒவ்வொரு அசைவையும் கவனிக்கும் காவல்துறை ஏன் அவர்கள், காவல் நிலையம் அருகே நடந்த சாராய வியாபாரத்தை உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி வளர்மதி மேடையில் பேசினார். தமிழக அரசிற்கு எதிராக கோஷமிட்டபடி கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி