திருப்போரூர் பேரூராட்சியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

77பார்த்தது
திருப்போரூர் பேரூராட்சியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் போட்டியிடும் காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் செல்வத்திற்கு வாக்குகளை சேகரித்த பேரூராட்சி மன்ற தலைவர் தேவராஜ்.

தமிழகத்தில் வருகின்ற 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் (தனி) மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜி செல்வத்திற்கு ஆதரவாக காஞ்சி வடக்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான தாமோ அன்பரசன் ஆலோசனையின் பேரில் திருப்போரூர் பேரூர் செயலரும், மன்ற தலைவருமான தேவராஜ் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் 100 க்கும் மேற்பட்ட பெண்களுடன் வீதி வீதியாக சென்று நாடாளுமன்ற வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் பேரூராட்சி கவுன்சிலர் பாரதி சமரன் திமுக இளைஞரணி செயலாளர் வீரா உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து உதய சூரியன் சின்னத்திற்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தனர் நிகழ்ச்சியில் விசிக பொறுப்பாளர்கள் கார்த்திக், செல்வம் இருசப்பன் காங்கிரஸ் கட்சி நிர்வாகி தியாகு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி