டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்

2948பார்த்தது
டீக்கடையில் டீ போட்டு மாம்பழச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர். 2024 மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்கு சேகரிப்பில் பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் உறுப்பினர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக பாமக சார்பில் போட்டியிடும் ஜோதி வெங்கடேசன் அவர்கள் கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே ஒரு டீக்கடையில் வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அமுமுக கூடுவாஞ்சேரி நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் வேட்பாளருக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன் தேசிய கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி