மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா

71பார்த்தது
மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 25 இலட்ச மதிப்பீட்டில் உதவி உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சார்பில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை / செயற்கை கால் CSR பெரு நிறுவனங்கள் சமூக பங்களிப்பு நிதி மூலம் 17, 68, 200 மதிப்பீட்டில் செயற்கை கை மற்றும் செயற்கை கால்கள் என 39 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கும், 6, 54, 000 மதிப்பீட்டில் 150 பயனாளிகளுக்கு காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகளும் மற்றும் ஒரு பயனாளிக்கு 96, 011 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் என மொத்தம் 25, 18, 211 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி