செங்கல்பட்டு டவுன் - Chengalpattu Town

காஞ்சிபுரத்தில் சரளை மணல் கடத்தியவர் கைது

காஞ்சிபுரத்தில் சரளை மணல் கடத்தியவர் கைது

காஞ்சிபுரம் அடுத்த, பாலுச்செட்டிச்சத்திரம் அருகே, அனுமதியின்றி சரளை மணல் எடுத்து செல்வதாக, கனிமவளத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கனிமவளத் துறை சிறப்பு தாசில்தார் விஜயகுமார், பாலுச்செட்டிச்சத்திரம் அருகே சோதனை செய்தபோது, அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற லாரியை மடக்கி பறிமுதல் செய்தார். இதுபற்றி, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசிலும் புகார் அளித்தார். அவரது புகாரை தொடர்ந்து, பாரத் பென்ஸ் ரக லாரியை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்திய கச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், 29, என்பவரை கைது செய்தனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా