மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக கட்டி முடிக்கப்பட்ட மூன்று கலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி
மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்குபுத்தூர், விண்ணம்பூண்டி, பொற்பணங்கரணை இப்பகுதிகளில் கலையரங்கம் கட்டி தர வேண்டுமென பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்தக் கோரிக்கையின் பெயரில் அப்பகுதி கிராம மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கலையரங்கம் கட்டுவதற்கு 7. 70 லட்சம் மதிப்பீட்டில் மூன்று கலையரங்கம் கட்டுவதற்காக மொத்தம் 21. 10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கத்தினை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், அச்சரபாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து குத்து விளக்கு ஏற்றி வைத்து ரிப்பன் வெட்டி கலையரங்கத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.