மதுராந்தகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அரிசி காய்கறிகள் மற்றும் உணவு இவைகளை வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றுக்கு உட்பட்ட கிணார் ஊராட்சியில் உள்ள இருசமநல்லூர் பகுதியில் உள்ள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வையாவூர் வி. ஜி. குமரன், கருங்குழி பேரூர் கழக செயலாளர் ஆர். டி. ஜெயராஜ் இவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் அரிசி காய்கறிகள் பிரட் பிஸ்கட் இவைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை கே சி சரவணன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.