சூறைக் காற்றுடன் மழை விமான சேவை அடுத்தடுத்து பாதிப்பு

56பார்த்தது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் மழை பெய்து மோசமான வானிலை நிலவியதால், சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமையும் விமான சேவைகள் பாதிப்பு.

அபுதாபி, திருச்சி, டெல்லி, திருவனந்தபுரம், அந்தமான் ஆகிய இடங்களில் இருந்து வந்த 5 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து விட்டு, அபுதாபி சர்வதேச விமானம் பெங்களூருக்கு திரும்பி சென்றது. மற்ற நான்கு விமானங்கள் தொடர்ந்து வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்துவிட்டு, சுமார் ஒரு மணி நேரத்தில் மழை ஓய்ந்ததும், ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.

அதைப்போல் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான கொல்கத்தா, புனே, ஹைதராபாத், மும்பை, தோகா, கவுகாத்தி, டெல்லி, ராஜமுந்திரி உள்ளிட்ட 14 புறப்பாடு விமானங்கள் தாமதம்.

சென்னை விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக, வருகை, புறப்பாடு 19 விமான சேவைகள் பாதிப்பு.

தொடர்புடைய செய்தி