மண் அரிப்பால் சாலையோர வளைவில் பள்ளம்

58பார்த்தது
மண் அரிப்பால் சாலையோர வளைவில் பள்ளம்
சின்ன காஞ்சிபுரம், திருவள்ளுவர் தெரு கிழக்கு பகுதியில், வி. என். பெருமாள் தெருவுடன் இணையும் இடத்தில், சாலையோரம் மழைநீர் கால்வாய் உள்ளது.

சில ஆண்டுகளாக, இக்கால்வாயில் சென்ற மழைநீரால் சிறுபாலத்தை ஒட்டியுள்ள சாலையோர வளைவு பகுதியில், மண் அரிப்பு காரணமாக ் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், திருவள்ளுவர் தெருவில் இருந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வி. என். பெருமாள் தெருவில், இடதுபக்கம் சாலை வளைவில் திரும்பும்போதும், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போதும் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், வி. என். பெருமாள் தெருவில், மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி