சென்னை விமான நிலையத்தில் புதிய விமான சேவை

83பார்த்தது
மஸ்கட்-சென்னை-மஸ்கட் இடையே, கூடுதலாக புதிய நேரடி விமான சேவைகள், இன்று முதல் தொடங்கியது.

இதுவரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், ஒவ்வொரு விமான சேவை வீதம், இரண்டு நேரடி விமான சேவைகள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில், 3 நேரடி விமான சேவைகள் இயக்கப்படுவதால், பயணிகள் மகிழ்ச்சி.

ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்- சென்னை-மஸ்கட் இடையே, புதிய நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியது.

ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை இதுவரையில், ஓமன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மட்டுமே நடத்தி வந்தது. ஓமன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் காலை மற்றும் மாலை ஒவ்வொரு விமான சேவை வீதம், தினமும் இரண்டு விமான சேவைகளை, மஸ்கட்- சென்னை- மஸ்கட் இடையே, இயக்கி வருகிறது. இது தவிர மற்ற விமான நிறுவனங்கள் நேரடி விமான சேவைகளை நடத்தாமல், சென்னையில் இருந்து மும்பை வழியாக மஸ்கட்டுக்கு விமான சேவைகளை இயக்கி வருகின்றன.

அதோடு பாரீஸ், லண்டன், பிராங்பார்ட் உள்ளிட்ட பல்வேறு பெரு நகரங்களுக்கு, இணைப்பு விமானங்களும், மஸ்கட்டில் இருந்து இருப்பதால், மஸ்கட்- சென்னை- மஸ்கட் விமானங்களில், எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் ஓமன் நாட்டில் உள்ள, சலாம் ஏர் விமான நிறுவனம், மஸ்கட்- சென்னை- மஸ்கட் இடையே, புதிய நேரடி விமான சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி