பாலியல் தொந்தரவு; குற்றவாளிக்கு சிறை தண்டனை

1068பார்த்தது
குரோம்பேட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் (நாகப்பன்) என்கின்ற சசிகுமார் (37) இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமையை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நாகப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி, குற்றவாளி நாகப்பனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து குற்றவாளி நாகப்பனை போலீசார் உதவியுடன் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி